*தீராத மார்புச்சளி,இருமல்,தொண்டைப்புண் சரியாக எளிய இயற்கை மூலிகை டீ செய்முறை விளக்கம்*
👉 *தேவையான மூலிகைகள்*
1.கற்பூரவள்ளிச்சாறு – 10 மி
2.கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
3.மிளகு – 10 கிராம்
4.சுக்கு – 50 கிராம்
5.திப்பிலி – 50 கிராம்
👉 *செய்முறை விளக்கம்*
✍️ மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் (கற்பூரவள்ளி சாறு தவிர) நன்கு காயவைத்து சுத்தம் செய்து வைத்து கொள்ளுங்கள்
✍️ சுத்தம் செய்த அனைத்தையும் நன்றாக அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்
✍️ 200 மி நீரை நன்கு கொதிக்க வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு அரைத்த பொடியை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்
✍️ கொதிக்கும் நீரை நன்கு சுண்டியதும் அதில் கற்பூரவள்ளி சாறு 10மி அளவு 2 ஸ்பூன் அளவுக்கு கலந்து டீ குடிக்கும் பதத்தில் தயார் செய்து கொள்ளுங்கள்
👉 *சாப்பிடும் முறை:*
மேற்கூறிய படி தயார் செய்த டீ தினமும் இரவு உணவுக்கு பின் மட்டுமே குடிக்க வேண்டும்...அதுவும் சூடாக குடிக்கவும்
👉 *மருத்துவ பயன்கள்:*
1.மார்பு சளி,கட்டி சளி தீரும்
2.நெஞ்செரிச்சல்,இருமல் நீங்கும்
3.வயிறு புண்,தொண்டை புண் சரியாகும்
4.காய்ச்சல் சரியாகும்
5.உடல் சோர்வு நீங்கி சுறுசுருப்பாகும்...
No comments:
Post a Comment